கார் மோதி எஸ்ஐ பலி

மதுரை, ஜன.24: மதுரையில் கார் மோதி டூவீலரில் சென்ற எஸ்ஐ உயிரிழந்தார்.  மதுரை திருநகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(57). இவர் மதுரை மீனாட்சியம்மன் கோயில் காவல்நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். கடந்த 2 தினங்களுக்கு முன் நாகமலைப்புதுக்கோட்டையில் இருந்து திருநகருக்கு தனது டூவீலரில் சென்றார். திருநகர் அருகே சென்று கொண்டு இருந்தபோது, எதிரே வந்த கார் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் கோபாலகிஷ்ணன் படுகாயமடைந்தார். அவரை மீட்டு மதுரை கே.கே. நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கரிமேடு போக்குவரத்துப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த கோபாலகிருஷ்ணனுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி, விஜயகுமார்(24), பாலாஜி(15) என்ற மகன்கள் உள்ளனர். 

Related Stories: