சமையல் மாஸ்டர் முகம் சிதைத்து கொலை கொடைக்கானலில் பயங்கரம்

கொடைக்கானல், ஜன. 24: கொடைக்கானல் எம்எம் தெரு நேதாஜி நகரை சேர்ந்தவர் விஸ்வலிங்கம் என்ற அணில்குமார் (45). இவர் கொடைக்கானல் தனியார் ஓட்டல்களில் சமையல் மாஸ்டராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை கொடைக்கானல் பஸ்ஸ்டாண்ட் அருகே உட் வில் சாலையில் அணில்குமார் முகத்தில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். இதை கண்ட அப்பகுதி மக்கள் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. இதுகுறித்து அணில்குமார் மனைவி மல்லிகா அளித்த புகாரின்பேரில் கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முதற்கட்டமாக அணில்குமாருடன் சம்பவத்தன்று மது அருந்திய நபர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் பாம்பார்புரத்தை சேர்ந்த ஆரீப் (35) என்பவர் அணில்குமாரை கொன்றது தெரிந்தது. மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த குடிபோதை தகராறில் ஆரீப் மண்டையை அணில்குமார் உடைத்ததும், அந்த ஆத்திரத்தில் தீர்த்து கட்டியதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் ஆரீப்பை கைது செய்தனர்.

Related Stories: