×

திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல், ஜன. 24: திண்டுக்கல்லில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நான்காம் நாள் நிகழ்ச்சியாக நேற்று வாகன பேரணி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் வேலு கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு துவங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு மருத்துவமனை அருகே நிறைவடைந்தது. பேரணியில் திண்டுக்கல்லில் இயங்கி வரும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி, இருசக்கர விற்பனையாளர்கள் ஹெல்மெட் அணிந்தபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  இதில் தனிச்சிறப்பு என்னவென்றால் 1940ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கார் முன்னே செல்ல அதன்பின் இருசக்கர வாகனம், குதிரை வண்டி ஆகியவை தொடர்ந்து சென்றதை பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.

Tags : awareness rally ,Dindigul ,
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி