×

பொதுமக்கள் எச்சரிக்கை இளம்பெண் மாயம்

கும்பகோணம், ஜன. 24: கும்பகோணம் அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் அருகே உள்ள சேங்கனூரை சேர்ந்த ராஜேந்திரன் மகள் அகிலா (19). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். கடந்த வாரம் வேலைக்கு சென்ற அகிலா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசில் ராஜேந்திரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து அகிலாவை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா