×

வாலிபர் கைது தஞ்சையில் மாவட்ட அளவிலான திறன் தேர்வு போட்டி

தஞ்சை, ஜன. 24: சீனாவின் ஷாங்காய் நகரில் 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச திறன் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க தொடக்க நிலையில் முதன்மை தேர்வு எழுதிய 51 போட்டியாளர்களில் தகுதி பெற்றவர்களுக்கு மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் தேர்வு நடந்தது. இதில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் அறிவுரைகள் வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பிரிவு திருச்சி மண்டல பயிற்சி இணை இயக்குனர், தஞ்சை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் சீராளன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் ராஜேந்திரன், திருச்சி மண்டல திறன் போட்டி குழு உறுப்பினர் வின்சென்ட்ராஜ், மாவட்ட திறன் போட்டி குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Tags : District-level skill selection competition ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா