×

8ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தஞ்சை, ஜன. 24: ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 8ம் வகுப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனி தேர்வர்கள் வரும் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் சரஸ்வதி பாடசாலை மேல்நிலைப்பள்ளி, தஞ்சை கல்வி மாவட்டத்தில் திருஇருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இத்தேர்வுகள் தொடர்பாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தஞ்சை அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் தமிழரசன் தெரிவித்துள்ளார்.

Tags : general election ,
× RELATED வாக்குசாவடிகளுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பது: போலீசார் தீவிர ஆலோசனை