×

9 பேர் மீது வழக்குப்பதிவு மேலைச்சிவபுரியில் வாசியோகம் குறித்த பயிற்சி

பொன்னமராவதி,ஜன.24: பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலைஅறிவியல் கல்லூரியில் வாசியோகம் குறித்த பயிற்சி நடைபெற்றது. சன்மார்க்க சபைத்தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் பழனியப்பன், கல்லூரிக்குழு தலைவர் நாகப்பன், செயலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி சித்த மருத்துவரும் யோகா பயிற்சியாளருமான குமரவேல் வாசியோகத்தின் சிறப்புகள் குறித்து பேசினார். இதில் துணை முதல்வர் செல்வராசு, பேராசிரியர்கள் அழகம்மை, தமிழ்செல்வி, குறிஞ்சி, பிருந்தா, ராஜா, வின்மதி, சுதா, நூலகர் தெய்வாணை, உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி மாணவி ராகினி வரவேற்றார். முடிவில் யோக பயிற்றுநர் ராஜாராஜேஸ்வரி நன்றி கூறினார்.

Tags : persons ,
× RELATED பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி...