×

அதிமுக முன்னாள் கவுன்சிலர் கொலையில் தொழிலதிபர் மருமகன் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை

புதுக்கோட்டை, ஜன. 24: கீரனூர் அருகே நடந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் கொலை வழக்கில் 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொழில் அதிபர் மருமகன் உள்பட 4 பேரை பிடித்து விசாரணை நடந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள களம்மாவூர் சத்திரம் அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மூர்த்தி கடந்த 6-2-2019ல் கூலிப்படையை வைத்து காரப்பட்டை சேர்ந்த வீராச்சாமி, அவரது மகன் முத்துகுமார் ஆகியோரை வெட்டி கொலை செய்தார். இது தொடர்பாக கீரனூர் போலீசார் தனிப்படை அமைத்து மூர்த்தி உள்ளிட்ட பலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூர்த்தி உள்ளிட்ட அனைவரும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மூர்த்தியை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் களம்மாவூர் சத்திரம் பகுதியில் உள்ள டீக்கடையில் வைத்து வெட்டி கொலைசெய்தது. இது தொடர்பாக கீரனூர் போலீசார் காரப்பட்டு வீராச்சாமியின் உறவினர் கிள்ளனூரை சேர்ந்த பாக்கியராஜ், இவரது தந்தை திரிசங்கு, பாக்கியராஜின் அண்ணன் ஜெயராமன், செங்குறிச்சி வீராச்சாமி, காரப்பட்டை சேர்ந்த குட்டார் (எ) ஆறுமுகம், திருச்சி கொட்டப்பட்டை சேர்ந்த பழனிச்சாமி, முருகன், ஜெய், ஆனந்த் உள்ளிட்ட 9 மீது வழக்குபதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இத்த வழக்கில் முதல் குற்றவாளியான வீரச்சாமியின் மருமகன் கிள்ளனூர் பாக்கியராஜ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : persons ,businessman ,son-in-law ,councilor ,murder ,AIADMK ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...