×

கல்வியாளர்கள் கோரிக்கை புதுக்கோட்டை 1வது வார்டில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் வெற்றியை எதிர்த்து வழக்கு

புதுக்கோட்டை, ஜன.24: புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 1வது வார்டில் அதிமுக கவுன்சிலரின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் தொடர்ந்து வழக்கு விசாரணை பிப்ரவரி 21ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் 7-வது வார்டில் த.மா.காவை சேர்ந்த கூகூர் சண்முகம் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் த.மா.கா. கூகூர் சண்முகம் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க.வை சேர்ந்த கலியமூர்த்தி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் பிப்ரவரி 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

மேலும் அன்று கூகூர் சண்முகம், தேர்தல் அலுவலர்கள் நேரில் ஆஜராக வேண்டும் எனக்கூறி உத்தரவிட்டார். இதேபோல புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 1-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் மாதவன் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக்கோரி தி.மு.க.வை சேர்ந்த 1-வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் ரெங்கராஜ் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் வருகிற பிப்ரவரி மாதம் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும் அன்று ஒன்றிய கவுன்சிலர் மாதவன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags : AIADMK Councilor ,Pudukkottai 1st Ward ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா