×

வாகனங்கள் அதிகரிப்பு எதிரொலி கம்ப்யூட்டர் வீல் அலாய்மென்ட் நிலையங்கள் அதிகரிப்பு

புதுக்கோட்டை, ஜன.24: தமிழகத்தில் வாகனங்களின் அதிகரிப்பால் சிறிய நகரங்களில் கூட கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய வீல் அலாய்மென்ட் மற்றும் டயர்கள் விற்பனை நிலையம் தொடங்குவது அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு ஒரு கிராமத்தில் ஆயிரம் வீடுகளில் 20 வீடுகளில் தான் இரு சக்கர வாகனம் இருக்கும். இதேபோல் நகர் பகுதியில் குறைந்து அளவு தான் இருசக்கர வாகனம் இருக்கும். இதேபோல் கிராமத்தில் ஒரு சில வீடுகளில் தான் நான்கு சக்கர வாகனம் இருக்கும். தற்போது இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் அதிகரித்துவிட்டது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் விற்பனை அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த வாகனங்களுக்கு தேவையான டயர்கள் வாங்க வேண்டுமெனில் பெரு நகரங்களுக்கு தான் செல்ல வேண்டும். குறிப்பாக நான்கு சக்கர வாகனங்களுக்கு டயர் மாற்ற வேண்டுமானால் திருச்சி, மதுரை போன்ற பெரு நகரங்களுக்குதான் போக வேண்டும்.

ஏனென்றால் அங்குதான் கணிப்பொறி உதவியுடன் வீல் அலாய்மென்ட் பார்க்க முடியும். மேலும் பல்வேறு வகையான கம்பெனிகளின் டயர்களை வாங்க இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர்கள் பெரு நகரங்களை நோக்கி வருவார்கள். இதனால் அவர்களுக்கு அதிக அலைச்சல், வீண் செலவு அதிகரித்து வந்தது. காலையில் சென்றால் மாலை ஆகிவிடும். இடைப்பட்ட நேரம் அந்த இடத்திலேய முடங்கி கிடக்க வேண்டும். இந்நிலையில் தற்போது டயர் விற்பனை சிறு நகரங்களுக்கு வந்துள்ளது. குறிப்பாக நான்கு சக்கர வாகனங்களுக்கு தேவையான அனைத்து வித முன்னணி நிறுவனங்களின் டயர்கள் கிடைக்கிறது. மேலும் டயர்கள் மாற்றும்போது வீல் அலாய்மென்ட் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இதற்கு கணிப்பொறி வசதியுடன் அலாய்மென்ட் கருவி இருக்க வேண்டும். இந்த வசிதிகள் அனைத்தும் கொண்ட கடைகள் தற்போது பேரூராட்சி அளவில் உள்ள சிறிய நகரங்களுக்கு வந்துவிட்டது. இதனால் வாகனம் வைத்திருப்போர்கள் பெருநகரங்களை நோக்கி செல்வதை தவிர்த்து வருகின்றனர். மேலும் வாகனத்தை வீல் அலாய்மென்ட் நிலையத்தில் விட்டு விட்டு அந்த பகுதியில் தங்களின் சொந்த பணிகளையும் மேற்கொண்டு நேரத்தை மிச்சப்படுத்துகின்றனர். மேலும் சிறு நகரங்களில் இற்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் கடைகள் வைத்திருப்போர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Computer Wheel Alloy Stations ,
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...