×

சிக்கல் ரயில்வே கேட் அருகே இருப்புபாதையை கடக்கும் சாலையை சீரமைக்க வேண்டும்

கீழ்வேளூர், ஜன.24: சிக்கல் ரயில்வேகேட் அருகே இருப்புபாதையை கடந்து செல்லும் சிக்கல்-சிக்கல்பத்து சாலையை ரயில்வே நிர்வாக சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் சிக்கல் ரயில் நிலையம் அருகே சிக்கல்-சிக்கல்பத்து சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட்டை கடந்து ஆய்மலை, சிக்கல் பத்து, ஒரத்தூர், அகலங்கண் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தினம்தோறும் ஏராளமாக சென்று வருகிறது. இந்த ரயில்வே கேட்டில் ரயில் தண்டவாளம் சாலை மட்டத்திற்கு மேலே 4 இஞ்ச் உயரம் உள்ளது. மேலும் இருப்புபாதை பக்க வாட்டில் போடப்பட்ட சிமெண்டு சிலாப் அதிக இடைவெளி விட்டும், அந்த இடை வெளியில் ஒற்றை கருங்கல் ஜல்லியும் போடப்பட்டுள்ளது.

இதனால் இரண்டு சக்கர வாகனங்கள் செல்லும் போது ஒன்றை ஜல்லி வழுக்கி விடுவதுடன் ஆட்டோ, இரண்டு சக்கர வாகனங்கள் சாலையை விட உயரமாக உள்ள தண்டவாளத்தில் ஏறி செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். தண்டவாளம் உள்ள பகுதி ரயில்வேக்கு சொந்தமான இடம் என்பதாலும், நெடுஞ்சாலைதுறையினர் அந்த இடத்தை பராமரிக்க முடியாது என்பதால் உடனடியாக ரயில்வே நிர்வாகம் சிக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள சிக்கல்-கோயில்பத்து சாலையில் ரயில்வே கேட்டில் உள்ள வாகன போக்குவரத்து சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : railway crossing ,railway gate ,
× RELATED விழுப்புரம் அருகே ஜானகிபுரம் ரயில்வே...