×

செம்பனார்கோவிலில் தேசிய வாக்காளர் தின பேரணி

தரங்கம்பாடி, ஜன.24: செம்பனார்கோவிலில் நடைபெற்ற தேசிய வாக்காளர்தின பேரணியில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். நாளை (25ம் தேதி) தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் செம்பனார்கோவிலில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தரங்கம்பாடி தாசில்தார் சித்ரா பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வாக்காளர்கள் வாக்களிப்பதின் அவசியம் பற்றியும், வாக்குரிமை ஜனநாயக கடமை என்பதை உணர்த்தும் வகையிலும் பதாகைகள் ஏந்தி மாணவர்கள் பேரணியாக சென்றனர். கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கிய பேரணி பரசலூர் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முடிந்தது. கல்லூரி முதல்வர் கல்யாணசுந்தரம் மற்றும் ஆசிரியர், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : National Voter Day Rally ,Chembanarkovil ,
× RELATED அமைச்சர் பேச்சு செம்பனார்கோவிலில்...