×

விவசாயிகள் எதிர்பார்ப்பு ராமானூர் ராஜா நகர் தெரு நுழைவு பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சீர்கேடு

கரூர், ஜன. 24: ராஜாநகரில் குவிந்துள்ள குப்பைகளால் சுகாதார கேடு ஏற்படுகிறது. கரூர் நகராட்சி ராமானூர் தியேட்டர் அருகே உள்ள தெருநுழைவு பகுதியில் குப்பைகூழங்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. கட்டிட இடிபாடு கழிவுகள் தெருவின் துவக்கத்தில் குவிக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே குப்பை கூழங்கள் குவிந்து கிடக்கின்றன. குப்பைகளை அகற்றாததால் துர்நாற்றம் வீசி வருகிறது. இப்பகுதியில் குப்பைகளை முறையாக அகற்றாதது குறித்து பல முறை புகார் அளித்தும், நகராட்சி சுகாதார பிரிவினர் கண்டுகொள்வதில்லை. இதனால் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. துர் நாற்றம் வீசி வருகிறது. இந்த பகுதியில் குப்பைகளை அகற்றி சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : entrance ,Ramanur Raja Nagar Street ,
× RELATED ஜேஇஇ 2ம் கட்ட முதன்மைத் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு