×

கருங்குழி பேரூராட்சியில் அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டில் அடைத்த அதிகாரிகள்

மதுராந்தகம், ஜன. 24: கருங்குழி பேரூராட்சியில், அட்டகாசம் செய்த குரங்குகளை, வனத்துறையினர் கூண்டில் பிடித்து காட்டில் பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர். மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சியில் கடந்த சில நாட்களாக  குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, கருங்குழி பேரூராட்சியின் முக்கிய பகுதிகளாக விளங்கும் கருங்குழி, மேலவலம்பேட்டை உள்பட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன.இவை,  வீட்டு தோட்டங்களில் உள்ள செடிகள், காற்கறிகள், தென்னை மரங்களில் காய்த்து தொங்கும் இளநீர் ஆகியவற்றை பறித்து சேதப்படுத்துகின்றன. சில நேரங்களில், வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் அங்குள்ள காய்கனி, பொருட்களை எடுத்துச்  செல்கின்றன. இதுபோல் வரும் குரங்குகள், கூட்டமாக வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்து ஓடும் ஏற்படுகிறது. இதுபோன்ற சேட்டைகளை செய்யும் குரங்குகளை பிடித்து, காட்டில் விட வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள்  வலியுறுத்தினர்.

இந்நிலையில், கருங்குழி பகுதியில் மதுராந்தகம் வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன், குரங்குகளை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இதற்காக அந்த பகுதியில் கூண்டு அமைத்து, அதில் பழங்கள்,  காய்கள் வைத்து காத்திருந்தனர். இதைெதாடர்ந்து, கூண்டில் உள்ள பழங்களை சாப்பிடுவதற்காக குரங்குகள் கூட்டமாக அங்கு சென்றன. அப்போது திட்டமிட்டபடி குரங்குகள் கூண்டில் ஏறியவுடன், அதனை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர்.  அந்த கூண்டில் சுமார் 30 குரங்குகள் சிக்கின. இதையடுத்து, அந்த குரங்குகளை, பாதுகாப்பாக மேல்மருவத்தூர் அருகே உள்ள ராமாபுரம் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குரங்குகளை பிடிக்கும்  நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்பட வேண்டும். இங்கே 500க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிவதால், நாங்கள் பாதிக்கப்படுகிறோம். எனவே, இவைகளை துன்புறுத்தாமல் இவைகளை கூண்டுகள் மூலமாக பிடித்து அடர்ந்த  வனப்பகுதிகளுக்கு கொண்டு சென்றுவிட வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED மதுராந்தகம் பகுதியில் நீர் ஆவியாவதை...