×

இலவச மருத்துவ முகாம்

செங்கல்பட்டு, ஜன. 24:  மறைமலைநகர் போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு வண்டலூர் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. சர்க்கரை, கண் சிகிச்சை உள்பட பல்வேறு  நோய்களுக்கு  இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் செல்வம், முன்னாள் நகர் மன்ற தலைவர் கோபிகண்ணன், வணிகர் சங்கத் தலைவர் அல்லிமுத்து உள்பட 100க்கும் மேற்ப்பட்டோர் கலந்து  கொண்டனர்.பெரும்புதூர்: பெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, இலவச மருத்துவ முகாம் பெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடந்தது.வட்டார  போக்குவரத்து ஆய்வாளர் முகுந்தன் தலைமை வகித்தார். பெரும்புதூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு டிரைவர்களுக்கு கண் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை செய்தனர். கண் குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை  மேற்கொள்ள பரிந்துரை செய்தனர்.  இதில் 100க்கும் மேற்பட்ட டிரைவர்கள், ஊழியர்கள் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.

Tags : Free Medical Camp ,
× RELATED மீஞ்சூர் காவல் நிலையத்தில் இலவச மருத்துவ முகாம்