×

நண்பனை மதுபாட்டிலால் குத்திய வாலிபரால் பரபரப்பு

திருக்கோவிலூர், ஜன. 24:  திருக்கோவிலூர் அடுத்த டி.தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் வெங்கடேசன்(30). இவர் கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் அருண்(25). இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன் வெங்கடேசன் அதே பகுதியில் உள்ள சலூன் கடையில் தனது செல்போனை சார்ஜ் போட்டு விட்டு தலைமுடியை வெட்டிக்கொண்டு இருந்தபோது, அருண் செல்போனை திருடிச்சென்று அடகு வைத்து  செலவு செய்து விட்டதாக தெரிகிறது. பின்னர் அந்த செல்போனை வெங்கடேசன் மீட்டு வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தேவனூர் கூட்ரோட்டில் வெங்கடேசன் அங்கு நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்ற அருணிடம் ஏன் செல்போனை திருடி சென்றாய் என கேட்டுள்ளார். அப்போது இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இதில் கோபமடைந்த அருண் தான் வைத்திருந்த குவார்ட்டர் பாட்டிலை உடைத்து வெங்கடேசன் முதுகு பகுதியில் குத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்கள் சண்டையை தடுத்து விட்டு  வெங்கடேசனை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாட்டிலால் குத்திய சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : bartender ,
× RELATED மதுக்கடை திறந்ததால் மன நிம்மதி...