மரக்காணம், ஜன. 24: மரக்காணம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான பொது மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் இங்கு அனைத்து சாலைகளிலும் பகல், இரவு நேரங்களில் கூட வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் இப்பகுதியில் உள்ள ஒரு சிலர் தங்களது வீடுகளில் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இதுபோல் கால்நடைகளை வளப்பவர்கள் அவற்றை முறையாக பராமரித்து வீடுகளில் கட்டி வைக்காமல் விட்டு விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதுகுறித்து மரக்காணம் பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகணன் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ளவர்கள் தங்களது வீடுகளில் வளர்த்து வரும் மாடுகள், ஆடுகள் ஆகியவற்றை முறையாக பராமரிக்காமல் வெளியில் விட்டு விடுகின்றனர்.