குடியாத்தம், ஜன. 24: குடியாத்தத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி நடந்த மாரத்தான் போட்டியை எஸ்பி பிரவேஷ்குமார் தொடங்கி வைத்து பேசுகையில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வாரவிழா நடந்து வருகிறது. இதையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மினி மாரத்தான் போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு குடியாத்தம் டிஎஸ்பி சரவணன் தலைமை தாங்கினார். தாலுகா இன்ஸ்பெக்டர் கவிதா, பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன் வரவேற்றார்.