காங்கயம், ஜன.23: சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி சிறப்பு கண் சிகிச்சை முகாம் காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.31வது சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் நடந்த கண் சிகிச்சை முகாமை காங்கயம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், காங்கயம் காவல்துறை, திருப்பூர் லோட்டஸ் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து நடத்தின.