பெருந்துறை, ஜன.23: தேர்தல் பயணப்படி வழங்கியதில் அரசு பாரபட்சமாக செயல்பட்டதாக அரசு ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர். ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு அடிப்படை சம்பளத்தை கணக்கிட்டு பயணப்படி வழங்கப்பட்டது. அதில், அரசு வாகன ஓட்டுனர்களுக்கு மிக குறைவான தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட அரசு ஊர்தி ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசு ஊர்தி ஓட்டுநர் சங்க ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணியம், சண்முகம் ஆகியோர் கூறுகையில்,` ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊரக வளர்ச்சித்துறையைச் சார்ந்த அனைத்து நிலையில் பணி புரியும் அலுவலர்களும், ஓட்டுநர்களும் இரவு பகல் பாராமல் உழைத்துள்ளனர். ஆனால், தேர்தல் ஊதியம் வழங்கும் விஷயத்தில் அரசு ஒருதலை பட்சமாக நடந்துள்ளது.