மனுநீதி நாள் முகாம்

மொடக்குறிச்சி, ஜன.23:  மொடக்குறிச்சி அருகே புஞ்சைக்காளமங்கலம் ஊராட்சி சின்னம்மாபுரத்தில் உள்ள சமுதாயாக் கூடத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமை வகித்தார். இம்முகாமில், 10 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 5 பேருக்கு வாரிசு சான்றிதழ், 20 நபருக்கு பட்டா மாறுதலுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், விதவை சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரிடம் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் மனுவை பெற்றுக் கொண்டார். முன்னதாக, மொடக்குறிச்சி தாசில்தார் கௌசல்யா வரவேற்றார். இந் நிகழ்ச்சியில், ஆர்.ஐ.,க்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தீயணைப்புத்துறையினர், சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.

Related Stories: