பெருந்துறை, ஜன.23: சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி அரசு ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்து வருகிறது. 31வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி பல்வறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதன்படி, அரசு ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஈரோடு, பெருந்துறை, கோபி, பவானி மற்றும் சத்தியமங்கலம் ஆகிய வட்டாரப் போக்குவரத்து அலவலகங்கள் இணைந்து நேற்று பெருந்துறை பனிக்கம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் மருத்துவ முகாமை நடத்தினர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் துவக்கி வைத்தார்.