×

தடை புகையிலை விற்றவர் கைது

சாத்தூர், ஜன. 23: சாத்தூர் அருகே, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றவரை போலீசார் கைது செய்தனர். சாத்தூரை அடுத்த மஞ்சளோடைபட்டி கிராமத்தில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பதாக ஏழாயிரம் பண்ணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்ற போலீசார், புகையிலை பொருள் விற்ற அதே கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (70) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...