×

சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரம் விநியோகம்

ராஜபாளையம், ஜன.23: ராஜபாளையம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சாலை பாதுகாப்பு, சாலை விதிமுறை குறித்தும், சாலை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், பஸ் ஒன்று அலங்கரிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு
சென்று துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. பழைய பஸ்நிலையம் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜூக்கள் கல்லூரி புதிய பகுதிகளுக்கு பஸ் கொண்டு செல்லப்பட்டு சாலை விதிமுறைகள் குறித்தும் பாதுகாப்பு குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரியில் சாலை விதிமுறை குறித்தும் போட்டி நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விருதுநகர் மாவட்ட மண்டல பொதுமேலாளர் சிவலிங்கம், துணை மேலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் ராஜபாளையம் கிளை மேலாளர்கள் ஜீவா, மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராஜபாளையம் மோட்டார் பயிற்சியாளர்கள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED நலத்திட்ட உதவிகள் கிடைக்காவிட்டால்...