×

நலத்திட்ட உதவி வழங்கல்

திருவில்லிபுத்தூர், ஜன. 23: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள பூவாணி கிராமத்தில், வருவாய்த்துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் தாசில்தார் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சந்திரபிரபா முத்தையா எம்.எல்.ஏ கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா, இலவச வீட்டுமனைப் பட்டா முதலமைச்சரின் சாலை விபத்து நிவாரணம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்ட விபத்து நிவாரணம் என 76 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. மேலும், ஒரு பயனாளிக்கு வட்ட வழங்கல் துறை சார்பில் குடும்ப அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், மாவட்ட கவுன்சிலர் கணேசன் உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி