தேனி, ஜன. 23:தேனி அருகே வீரபாண்டியில் உள்ள சவுராஷ்டிரா கல்வியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் நடந்தது. தேனி அருகே வீரபாண்டியில் உள்ள சவுராஷ்டிரா கல்வியியல் கல்லூரியில் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சவுராஷ்டிரா கல்விக்குழுத் தலைவர் ஜவஹர்லால் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பிரபு முன்னிலை வகித்தார்.
இதில் ஆசிரியர் அரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது, சங்க தலைவராக முன்னாள் மாணவர் கதிரவன், செயலாளராக கலைமதி, பொருளாளராக பகவதிராணி மற்றும் 8 செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கல்விக்குழும தலைவர் ஜவஹர்லால் பேசும்போது, இந்த முன்னாள் மாணவர் சங்கத்திற்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்குவதாகவும், இச்சங்கத்தை பதிவு செய்து முறைப்படுத்திட முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் வழங்குவதாகவும் கூறி நிதி வழங்கினார். கணிதத்துறை பேராசிரியர் செல்வக்குமார் நன்றி கூறினார்.