×

துப்புரவு தொழிலாளர்கள் பற்றாக்குறையால் காளையார்கோவிலில் சுகாதாரக்கேடு

காளையார்கோவில், ஜன.23: காளையார்கோவிலில் உள்ள தெருக்களில் கடந்த சில மாதங்களாக குப்பைகள் அள்ளாமல் விட்டதால், தெருக்களில் புதிய குப்பைமேடுகள் உருவாகி உள்ளது. மேலும் தெருக்கள் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகின்றது. காளையார்கோவில் ஒன்றியம் 43 பஞ்சாயத்து கிராமங்களின் தலைநகரமாக உள்ளது. ஆனால் இப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட தெருக்களில் சில மாதங்களாக குப்பைகள் அள்ளாமல் தெருக்கள் முழுவதும் குப்பை மேடாக உள்ளதால் தெருக்கள் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகின்றது. இதனால் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காளையார்கோவில் ஊராட்சியில் மூர்த்தி நகர் செல்லும் மண் ரோடு மற்றும் யூனியன் நிழற்குடை அருகில் குப்பை தொட்டி இருப்பதால் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. மேலும் செட்டியூரணியை சுற்றிலும் குப்பைளை கொட்டிவருவதால் மழை காலங்கலில் குப்பைகளில் இருந்து கழிவுநீராக வெளியேறி

Tags : sanitation workers ,Kaliyarikovil ,
× RELATED சுட்டெரிக்கும் வெயிலையும்...