மானாமதுரை, ஜன.23: சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி மானாமதுரையில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தலைக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர். மானாமதுரை அரசு மகளிர்மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை மானாமதுரை டி.எஸ்.பி. கார்த்திகேயன் துவக்கி வைத்தார். ஊர்வலம் பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று சிவகங்கை ரோட்டில் உள்ள அரசுப் பள்ளியில் முடிந்தது. இன்ஸ்பெக்டர் சேது, எஸ்ஐ மாரிக்கண்ணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.