×

காரைக்குடி பகுதியில் மின்தடை

காரைக்குடி, ஜன. 23: காரைக்குடி அருகே கானாடுகாத்தான் துணைமின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்புபணிகள் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராம்நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமலங்கம், நெற்புகபட்டி, ஆவுடையபொய்கை, ஓ.சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின்விநியோகம் இருக்கது என செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார். கல்லல் துணைமின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புகள் பணிகள் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கல்லல், தேவபட்டு, செவரக்கோட்டை, மருங்கிபட்டி, ஆலம்பட்டு, வெற்றியூர், சாத்தரசன்பட்டி, மாதவராயன்பட்டி, செம்பனூர், பாகனேரி, நடராஜபுரம், பனங்குடி, கவுரிபட்டி, அரண்மனை சிறுவயல், பொய்யாமணிப்பட்டி, சொக்கநாதபுரம், கீழக்கோட்டை, பட்டமங்களம், கண்டராமணிக்கம், கம்பனூர், நாச்சியார்புரம், ஆலங்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Tags : area ,Karaikudi ,
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!