×

வாலிபரை கத்தியால் குத்தி மாமூல் பறித்த ரவுடி கைது

மதுரை, ஜன.23: மதுரை கருப்பாயூரணி வீரபாண்டி நகரை சேர்ந்தவர் பாண்டித்துரை(28). இவர் டூவீலரில் வரிச்சியூர் ேராட்டில் சென்றார். அப்போது வீரபாஞ்சான் கண்மாய் அருகே 2 பேர் கத்தி முனையில் தடுத்து நிறுத்தினர். செலவுக்கு பணம் கொடு என்றனர். பணம் தரமறுத்த பாண்டித்துரையை இருவரும் சரமாரியாக கத்தியால் குத்தினர். மேலும் பையில் இருந்த ரூ.ஆயிரத்து 500ஐ எடுத்துக்கொண்டு தப்பினர். இது குறித்து பாண்டித்துரை கருப்பாயூரணி போலீசில் புகார் அளித்தார்.
 புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கருப்பாயூரணி இன்ஸ்பெக்டர் மாடசாமி, ஆண்டார்கொட்டாரத்தை சேர்ந்த தர்மரை(22) கைது செய்தார். ரவுடி தர்மர் மீது ஏற்கனவே சிலைமான், கருப்பாயூரணி ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Rowdy ,
× RELATED குண்டர் சட்டத்தில் ரவுடி கைது