×

பருப்பு வியாபாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை

மதுரை, ஜன.23: மதுரையில் பருப்பு வியாபாரி வீட்டில் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மதுரை பார்க்டவுன் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார்(49). பருப்பு வியாபாரி. இவர் கடந்த 19ம் தேதி உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்று விட்டனர். சென்னையில் இருந்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அசோக்குமார், உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 12 பவுன் நகை மற்றும் ரூ.37ஆயிரம் ரொக்கம் போன்றவை திருடு போயிருந்தது. இது குறித்து கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : lentil dealer ,house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்