×

ஒட்டன்சத்திரத்தில் மருத்துவ மாணவியின் தந்தையை கடத்த முயற்சி 4 பேர் கைது

ஒட்டன்சத்திரம், ஜன. 23:  ஒட்டன்சத்திரம் ஏபிபி நகரை சேர்ந்தவர் டேனியல் (61). இவரது மகள் சென்னை மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறார். தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்த ராமசாமி மகன் சுரேஷ் (27). இவர் திண்டுக்கல் சாலையில் உள்ள ஸ்கேன் சென்டரில் நிர்வாகியாக பணிபுரிந்து வந்துள்ளார். டேனியல் மகளும், சுரேசும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவ்விஷயம் டேனியலுக்கு தெரியவர, மகளை கண்டித்துள்ளார். இதனால் அவர் சுரேசுடன் தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சுரேஷ் டேனியல் மற்றும் அவரது மகளிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு டேனியல் வேலை விஷயமாக தனது காரில் திண்டுக்கல் சாலையில் சக்தி கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு காரில் வந்த சுரேஷ், அவரது நண்பர்கள் ஆடலூரை சேர்ந்த மணிகண்டன் (27), தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்த அருண்குமார் (20), விஜய் (21) ஆகியோர் டேனியலின் காரை மறித்து அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி காரில் கடத்த முயற்சித்துள்ளனர். இதை கண்ட அருகில் இருந்தவர்கள் டேனியலை மீட்டனர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து சுரேஷ் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : student ,
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...