நத்தம் கைலாசநாதர் கோயிலில் பிரதோஷம்

நத்தம், ஜன. 23: நத்தம் கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோயிலில் தை மாத பிரதோஷ விழா நேற்று நடந்தது. இதையொட்டி உள்பிரகார சன்னதி முன்புள்ள நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

Related Stories: