கொடைக்கானல், ஜன. 23: கொடைக்கானலில் இரண்டாவது கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த விரக்தியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கொடைக்கானல் தந்திமேடு பகுதியை சேர்ந்தவர் ராணி (48). இவரது கணவர் பன்னீர்செல்வம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் வினோத்குமார் (30), மகள் வின்சியா ஆகியோருடன் வசித்து வந்த ராணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பூம்பாறை பகுதியை சேர்ந்த செல்வம் (57) என்பவருடன் பழகி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். செல்வமும் ஏற்கனவே திருமணமானவர். இவரது மனைவி தீக்குளித்து இறந்து விட்டார். இந்நிலையில் செல்வம், அப்பகுதியை சேர்ந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் செல்வத்திற்கும், ராணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.