×

2வது கணவர் கள்ளத்தொடர்பால் விரக்தி கொடைக்கானலில் பெண் தீக்குளித்து தற்கொலை

கொடைக்கானல், ஜன. 23: கொடைக்கானலில் இரண்டாவது கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த விரக்தியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கொடைக்கானல் தந்திமேடு பகுதியை சேர்ந்தவர் ராணி (48). இவரது கணவர் பன்னீர்செல்வம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் வினோத்குமார் (30), மகள் வின்சியா ஆகியோருடன் வசித்து வந்த ராணி  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பூம்பாறை பகுதியை சேர்ந்த செல்வம் (57) என்பவருடன் பழகி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். செல்வமும் ஏற்கனவே திருமணமானவர். இவரது மனைவி தீக்குளித்து இறந்து விட்டார். இந்நிலையில் செல்வம், அப்பகுதியை சேர்ந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் செல்வத்திற்கும், ராணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கள்ளத்தொடர்பை துண்டிக்க வேண்டும் என ராணி பலமுறையும் செல்வம் அதுபற்றி கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராணி கடந்த ஜன. 21ம் தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் அவர் பலத்த தீக்காயமடைந்தார். இவரை காப்பாற்ற சென்ற செல்வத்திற்கும் தீக்காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீ்ட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ராணியை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ராணி உயிரிழந்தார். இதுகுறித்து மகன் வினோத்குமார் அளித்த புகாரின்பேரில் கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...