×

ஏற்காட்டில் கள்ளச்சாராயம் தீமை குறித்து விழிப்புணர்வு

ஏற்காடு, ஜன.23: ஏற்காட்டில் கள்ளச்சாராயம், மதுபானத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்காடு பஸ் ஸ்டாண்டில் வருவாய்த்துறை சார்பில், கள்ளச்சாரயம் மற்றும் மதுபானம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கோட்ட கலால் கூடுதல் அலுவலர் செல்வி பேசினார். ஏற்காடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரகு, ஏற்காடு டவுன் வருவாய் ஆய்வாளர் பெரியசாமி, கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் ஆனந்த் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Tags : Yercaud ,
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து