×

லாரி மீது கல்லூரி பஸ் மோதி விபத்து

சேலம், ஜன. 23: சேலம் சித்தனூர் பேருந்து நிலையம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். தர்மபுரி மாவட்டம், தொப்பூர் உப்பாரப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். லாரி டிரைவரான இவர் நேற்று தர்மபுரியில் இருந்து லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு, சேலம் வந்துள்ளார். லாரியில் அதே பகுதியை சேர்ந்த திலீப் கிளீனராக இருந்தார். நேற்று காலை 9.30 மணியளவில் சேலம் சித்தனூர் பேருந்து நிலையம் அருகே லாரி வந்தபோது, எதிரே சேலம் தனியார் கல்லூரி பேருந்து ஒன்று மாணவர்களை இறக்கிவிட்டு விட்டு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை மேட்டூரை சேர்ந்த மாணிக்கம் (70) என்பவர் ஓட்டி வந்தார். எதிர்பாராத விதமாக லாரி மீது கல்லூரி பேருந்து மோதியது. இதில், லாரி டிரைவர் ஆறுமுகம், திலீப் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும், பேருந்து ஓட்டி வந்த டிரைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அப்போது, சாலையில் சென்றவர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்