அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆத்தூர், ஜன.23:  ஆத்தூரில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் சார்பில், குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு, ஆத்தூர் பகுதியில் உள்ள அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார். காதர்மொய்தீன், முகமது, அமீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் ஹைதர்அலி, முகமது பயாஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திமுக நகர செயலாளர் பாலசுப்ரமணியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் முருகேசன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் வானவில், நகர காங்கிரஸ் தலைவர் முருகேசன், திமுக மாவட்ட செயலாளர் கோபால்ஜி, திராவிடர் கழக மாவட்ட துணை செயலாளர் மகேந்திரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சின்னதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: