கூடமலையில் பழுதடைந்த ஏடிஎம் இயந்திரம்

கெங்கவல்லி, ஜன.23: கெங்கவல்லி அருகே கூடமலையில் வங்கி ஏடிஎம் இயந்திரம் இயங்காததால் மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சியில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி, 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் இயங்கி வருகிறது. இதை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், வங்கியில் உள்ள ஏடிஎம் இயந்திரம் பழுதானது. இதனை சரி செய்யாமல், ஏடிஎம் அறையை மூடி விட்டனர். இதனால், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பணம் எடுக்க முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால் கூடமலையை சேர்ந்த மக்கள், பணம் எடுக்க கெங்கவல்லி மற்றும் தம்மம்பட்டிக்கு 12 கிலோ மீட்டர் தூரம் சென்று, ஏடிஎம்மில் பணம் எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பழுதடைந்த ஏடிஎம் இயந்திரத்தை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: