ஆட்டையாம்பட்டியில் டிவைடரில் எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்ட கோரிக்கை

ஆட்டையாம்பட்டி, ஜன.23:  ஆட்டையாம்பட்டியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலை விரிவுபடுத்தப்பட்டது.பின்னர், சாலையின் நடுவே சுமார் 200மீட்டர் தூரத்திற்கு டிவைடர்கள் அமைக்கப்பட்டது. இதில் டிவைடரின் ஒரு பகுதியான முகப்பில், விபத்தை எச்சரிக்கும் இரவில் ஒளிரும் சிவப்பு வண்ண எச்சரிக்கை ஸ்டிக்கர் அமைக்கப்பட்டது. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேகமாக வந்த லாரி நடு டிவைடரில் மோதியதன் காரணமாக, சிவப்பு ஸ்டிக்கர் உடைந்துவிட்டது. இதனை இதுவரை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சீரமைக்கவில்லை. இதனால் இந்த வழியாக இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள், சாலையை கடக்கும் போது டிவைடரை கவனிக்காமல் விபத்தில் சிக்குகின்றனர். எனவே டிவைடர்களில் இரவில் ஒளிரும் வகையான ஸ்டிக்கர்களை ஒட்ட, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: