×

கிருஷ்ணகிரியில் திமுக சார்பில் சிறப்பு மக்கள் சபை கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.23: கிருஷ்ணகிரி நகராட்சியில் திமுக சார்பில் சிறப்பு மக்கள் சபை கூட்டம் இன்றும் (23ம்தேதி), நாளையும் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர திமுக செயலாளர் நவாப் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், நகர திமுக சார்பில் சிறப்பு மக்கள் சபை கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, இன்று (23ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புதியதாக பிரிக்கப்பட்டுள்ள 1வது வார்டு முதல் 11வது வார்டு வரை நடக்கிறது. நாளை (24ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 12வது வார்டு முதல் 22வது வார்டு வரையிலும் இந்த சிறப்பு மக்கள் சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ பங்கேற்கிறார். இதில் பொதுமக்கள் பங்கேற்று, தங்களது பகுதியில் உள்ள குறைகளை கூறி, மனு அளித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதி வட்ட செயலாளர்கள், வட்ட பிரதிநிதிகள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், அணிகளின் நிர்வாகிகள் செய்து, ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : Special People's Council Meeting ,Krishnagiri ,DMK ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்