×

அரூரில் சாலை பாதுகாப்பு வார விழா

அரூர், ஜன.23: அரூரில் 2வது நாளாக சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. அரூரில் 2வது நாளாக, நேற்று சாலை பாதுகாப்பு வார விழா கச்சேரி மேடு, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே நடந்தது. அரூர் டிஎஸ்பி செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் சாலை விதிகளை மீறும் ஓட்டுநர்களுக்கு ரோஜா பூ கொடுத்து இனிமேல் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், அரூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் நன்றி கூறினார். விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Aurora ,
× RELATED வெளியூரில் தங்கியிருக்கும்...