×

பள்ளி மாணவன் மாயம்

தர்மபுரி, ஜன.23: நல்லம்பள்ளி வடக்கு தெரு கொட்டாயைச் சேர்ந்தவர் மாது. இவரது மகன் அருளேஸ்வரன்(15), அதே பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சரிவர பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால், அருளேஸ்வரவனை பெற்றோர் கண்டித்தால், கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று 2, 3 நாட்கள் கழித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதேபோல், கடந்தாண்டு அக்டோபர் 10ம் தேதி கோபித்து கொண்டு சென்ற அருளேஸ்வரன் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.  இந்நிலையில், வீட்டை விட்டு சென்று 3 மாதங்கள் ஆகியும் மகன் திரும்ப வராததால், அவரது பெற்றோர் அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா