வி.கே.புரம் செட்டிமேடு சாலை ரூ.3.50 கோடியில் சீரமைப்பு முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்

வி.கே.புரம், ஜன. 23:  வி.கே.புரம் மதுரா கோட்ஸ் ஆலை வாசலிருந்து செட்டிமேடு வரை ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார். மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட வி.கே.புரம் மதுரா கோட்ஸ் ஆலை  வாசலிருந்து வேம்பையாபுரம் வரை உள்ள சாலை மூலதன மேம்பாட்டு நிதி ரூ.1.30 கோடி மதிப்பீட்டிலும், வேம்பையாபுரத்திலிருந்து செட்டிமேடு வரை தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு நிதி ரூ.2.20 கோடி மதிப்பீட்டிலும் 6 கி.மீ. தொலைவிற்கு தார்சாலை அமைக்கும் பணியை முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார். இதில் மணிமுத்தாறு பேரூராட்சி நிர்வாக அதிகாரி காளியப்ன், மணிமுத்தாறு அதிமுக நகரச் செயலாளர் ராமையா, வி.கே.புரம் நகரச் செயலாளர் கண்ணன், மதுரா கோட்ஸ் அண்ணா தொழிற் சங்கச் செயலாளர் கைக்கண்டார், தலைவர் அற்புதம், பொருளாளர் பால்பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் விஜயபாலாஜி, சிங்கை அருண், குஞ்சுபாலு, ரத்தினசபாபதி மற்றும் மதுரா கோட்ஸ் பொறியாளர் பாலகிருஷ்ணன், இளநிலை பொறியாளர் ஹரிஹரன், தொழில்நுட்ப உதவிப் பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: