நெல்லை அருகே விஷம் குடித்த விவசாயி சாவு

நெல்லை, ஜன.23:  நெல்லை அருகே உடல்நலக்குறைவால் விஷம் குடித்த விவசாயி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். நெல்லை அருகேயுள்ள இட்டேரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கொம்பையா (71). விவசாயியான இவர், உடல் சுகவீனம் காரணமாக சமீபகாலமாக பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்து அவரது மகன் நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: