வி.கே.புரம், ஜன.23: அம்பை தொகுதியில் கடடி முடிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை கலெக்டர் இன்று திறந்து வைக்கிறார். அம்பை தொகுதிக்கு உட்பட்ட பிரான்சேரியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயநலக்கூடம், வீரவநல்லூரில் ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை, ரூ.16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஜமீன் சிங்கம்பட்டி ஊராட்சி அலுவலகம், ஊர்காட்டில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம், ரூ.16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சிவந்திபுரம் ஊராட்சி அலுவலகம் மற்றும் சிவந்திபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையை கலெக்டர் ஷில்பா திறந்து வைக்கிறார். இதில் முருகையா பாண்டியன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.