புளியங்குடி, ஜன. 23 : வாசுதேவநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சிவகிரியில் நடந்தது. இதில் அமைச்சர் ராஜலட்சுமி பங்கேற்றுப் பேசினார்.
சிவகிரி சாந்திஜி கலையரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலாளர் மூர்த்தி பாண்டியன் முன்னிலை வகித்தார். சிவகிரி பேரூர் செயலாளர் காசிராஜன் வரவேற்றார் முன்னாள் டவுண் பஞ்சாயத்து துணை தலைவர் துக்காண்டி, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் ராஜலட்சுமி பேசுகையில், ‘‘சட்டப்பேரவைத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வருகிறோம்’’ என்றார். கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் சண்முகையா, ஜெ பேரவை வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலாளர் சாமிவேல், முன்னாள் தொகுதி செயலாளர் வக்கீல் துரை பாண்டியன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச் செயலாளர்கள், ஆயில்ராஜா பாண்டியன், ராஜேந்திரன், சின்னத்துரை, மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கம் பிச்சை சங்கரன்கோவில் ஒன்றியச் செயலாளர் ரமேஷ், புளியங்குடி நகரச் செயலாளர் பரமேஸ்வர பாண்டியன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஒன்றியச் செயலாளர் சீமான் மணிகண்டன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பழனிமுத்து, மாவட்டம் முத்துப்பாண்டியன், உள்ளார் மூர்த்தி, ஜெ பேரவை ஒன்றிய இணைச் செயலாளர் பெரியதுரை ராஜ்குமார், மாணவரணி வாசு ஒன்றியச் செயலாளர் சேவகப்பாண்டியன் முன்னாள் நிர்வாகிகள் முருகையா பாண்டியன், சசிகுமார், ராஜ், ஜோதிமுருகன், சிவகிரி பேரூர் நிர்வாகிகள் பொருளாளர் தங்கமணி, ஜெ பேரவை செயலாளர் வெங்கடேஷ், செல்வக்கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிவகிரி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மருதுபாண்டியன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வாசுதேவநல்லூர் ஒன்றிய அதிமுக செயலாளர்
மூர்த்திபாண்டியன் செயதிருந்தார்.