மணிமுத்தாறு கால்வாயில் மூழ்கி வாலிபர் பலி

நெல்லை, ஜன.23:  வீரவநல்லூர் அருகே மணிமுத்தாறு கால்வாயில் மூழ்கி வாலிபர் பலியானார்.களக்காடு மிஷன் ஸ்கூல் தெருவை சேர்ந்தவர் ஜெகன். எலக்ட்ரீசியன். இவருக்கு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். 2வது மகன் ராஜ்குமார்(17) ஒன்பதாம் வகுப்பு வரை முடித்து விட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் வீரவநல்லூர் புதூர் ரெட்டியாபுரம் அருகே உள்ள பூங்குடையார் குளத்திற்கு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மணிமுத்தாறு கால்வாயில் ஆசையுடன் குளிக்க சென்றுள்ளார். தண்ணீர் அதிகம் வந்த நிலையில் கால்வாயில் இறங்கி குளித்துள்ளார். அப்போது தண்ணீர் அவரை இழுத்துச் சென்ற நிலையில், உறவினர்கள் அவரை தேடியுள்ளனர். தண்ணீரில் மூழ்கிய அவரை காப்பாற்றி அம்பை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: