பணகுடி, ஜன. 23: தென்னிந்திய அளவிலான நீச்சல் போட்டியில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 6 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 32வது தென்னிந்திய அளவிலான நீச்சல் போட்டி ஆறு மாநிலங்களுக்கிடையே ஜனவரி 3ம் முதல் தொடர்ந்து 3 நாட்கள் நடந்தது. இதில் நெல்லை மாவட்டம், வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 6 பேர் வெற்றி பெற்று சாதனைபடைத்துள்ளனர். இவர்களில் ஜாஸ்வா தாமஸ் 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம், டேரல் ஸ்டீவ் 1 தங்கம், 3 வெண்கலம், அன்புகதிர் 1 வெள்ளி, பிரவீன் குமார் 2 வெள்ளி, 1 வெண்கலம், சுஹாசினி 1 வெண்கல பதக்கம் பெற்றனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த பயிற்சியாளர் சிக்கந்தர் ஷார்ஜர், சுல்தான் சிக்கந்தர் பாட்ஷா உள்ளிட்டோரையும் பள்ளித் தலைவர் கிரகாம் பெல், தாளாளர் திவாகரன், முதல்வர் ஆறுமுகக்குமார் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள், அலுவலர்கள் என ஏராளமானோர் பாராட்டினர்.