×

ஆரணி அருகே காஸ் தீ விபத்தில் போலீஸ்காரர் மனைவி பலி

ஆரணி, ஜன.23: ஆரணி அடுத்த களம்பூர் அருகே உள்ள சதுப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் அசோகன், ஓய்வு பெற்ற சிஆர்பிஎப் போலீஸ்காரர். இவரது மனைவி தமிழ்செல்வி(45). கடந்த 3ம் தேதி தமிழ்ச்செல்வி வீட்டில் காஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, காஸ் டியூப் பழுதடைந்து திடீரென சிலிண்டரில் இருந்து காஸ் கசிந்தது. இதில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த தமிழ்ச்செல்வி உடல் முழுவதும் பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கடந்த 8ம் தேதி வேலூருக்கும், அங்கிருந்து சென்னை மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வி இறந்தார். இதுகுறித்து அசோகன் களம்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : policeman ,gas fire ,Arani ,
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...